For Daily Alerts
Just In
டெல்லி விமான நிலையத்தில் விபத்து-உக்ரைன் நாட்டவர் பலி
டெல்லி: டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தில் பஸ் தாறுமாறாக ஓடியதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விமான நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக அந்தப் பேருந்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தது.
அந்தப் பேருந்து அதிகாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விமான நிலைய முனையத்திற்கு வெளியே இருந்த நான்கு பேர் மீது மோதியது.
இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மிக்கைலோ என்பவர் பலியானார். மற்ற 3 பேரும் வசந்த் கன்ஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மற்ற இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் அனுப்பப்பட்டு விட்டனர்.
Story first published: Sunday, June 1, 2008, 12:19 [IST]