நாஞ்சில் குமரன் ஓய்வு-சென்னை போலீஸ் கமிஷ்னரானார் சேகர்

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ஏற்கனவே புதிய ஆணையராக சேகர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று ஆணையராக சேகர் பதவியேற்றார். அவரிடம் தனது பொறுப்புகளை நாஞ்சில் குமரன் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சேகர் சந்தித்தார். அவர்களிடம் சேகர் பேசுகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை என்னிடம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுப்பேன். சென்னையில் ஏற்கனவே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இனி வருங் காலங்களிலும் சென்னையில் எந்த இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேலும் பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற குற்றங்களை தடுக்கவும் சமூக விரோதிகளின் நடவடிக் கைகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி எடுக்கப்படும்.
மேலும் ரவுடிகளை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறையில் இருந்து வெளிவரும் ரவுடிகள், குற்றவாளிகள் ஆகியோர் போலீசாரால் தொடர்ந்து கண்காணிக் கப்படுகிறார்கள். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பார்கள்.
சென்னையில் மோசடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 10 ரூபாய் பொருளை 2 ரூபாய்க்கு கொடுப்பேன் என்று யாராவது சொன் னால் அதை எப்படி கொடுக்கிறார்கள், அதன் பின்னணி என்ன என்பதை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இருப்பினும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக் கப்படும்.
தற்போது இருக்கும் போலீசாரை வைத்தே திறம்பட பணிகளை செய்வோம். இப்பற்றாக்குறையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறை களை எந்த நேரத்திலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றார்.
புதிய ஆணையராக பதவியேற்றுள்ள சேகர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1981-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனர், இணை கமிஷனர் மற்றும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆகிய பதவி களை வகித்துள்ளார்.
மேலும் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார். 1999- 2007ம் ஆண்டுகளில் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க!











Click it and Unblock the Notifications