அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகும்
சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையி்ல் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தமிழகத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வரும் 3 நாட்களில் பருவ மழை தீவிரமடையும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்,
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நேற்று அதிகபட்சமாக குழித்துறையில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. தக்கலையி 50 மி.மீ, நாகர்கோவில், கரூர், பரமத்தி, பேரையூர், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ,
திருச்சியில் 20 மி.மீ, திருவண்ணாமலை, கோத்தகிரி, சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 10 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம், திருமுல்லைவாயில், ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் மிக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் அந்தப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications