களக்காடு-முண்டன்துறை காப்பகத்தில் 10 புலிகள்!
களக்காடு: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், சிங்கவால் குரங்கு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.
இங்குள்ள விலங்குகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
தன்னர்வ தொண்டர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் தனிதனி குழுக்களாக பிரிநது காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடங்களையும், அவைகளின் எச்சங்களையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
கால் தடங்களை முண்டன்துறையில் வைத்து ஆய்வு நடத்தினர். இதில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 8 புலிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காட்டுக்குள் சென்ற வனத் துறையினர் குட்டி புலி உள்பட மேலும் 2 புலிகளை நேரில் பார்த்துள்ளனர். இவைகளையும் சேர்த்து மொத்தம் 10 புலிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.