வங்கி வருகைப் பதிவேடுகளில் இந்தி ஆதிக்கம்
சென்னை: சென்னையில் உள்ள சில அரசு வங்கிகளில் இந்தி ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் கையெழுத்திடும் வருகைப் பதிவேட்டில் அவர்களின் பெயர்களை இந்தியில்தான் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பணிகள் நடைமுறையில உள்ளன.
இந்த நிலையில் தமிழை ஓரம் கட்டி விட்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில், சில அரசு வங்கிகள் இறங்கியுள்ளனவாம். குறிப்பாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் இந்தி அதி வேகமாக புகத் தொடங்கியுள்ளது.
இங்கு, ஊழியர்கள் தினசரி கையெழுத்திடும் வருகைப் பதிவேட்டில் இந்தியில்தான் ஊழியர்களின் பெயர்களை எழுத வேண்டும் என உத்தரவு வந்துள்ளதாம். இதனால் வருகைப்பதிவேட்டில் இந்தியில் பெயர்களை எழுத ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் சில ஊழியர்களுக்கு இந்தி தெரியாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வங்கிகளில் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கும் இந்தியை கட்டுப்படுத்தாவிட்டால், அனைத்து நடைமுறைகளையும் இந்திக்குக் கொண்டு போய் விடுவார்கள் என்று ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications