பற்றாக்குறை-கோவில்பட்டியில் பெட்ரோல் பங்க் மூடல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்குகள் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. தற்போது நிலவி வரும் பெட்ரோல் தட்டுபாடு காரணமாக இங்குள்ள சில பங்க்குகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.
இந்நிலையில் நேற்று காலை முதல் நகரில் உள்ள அனைத்து பங்க்குகளும் மூடப்பட்டன. கோவில்பட்டி முக்கிய தொழில் நகரம் என்பதால் இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர்.
பங்க்குகளில் பெட்ரோல் கிடைக்காததால் நேற்று முதல் இவர்கள் திணறி வருகின்றனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஸ்டாக் இல்லாததால் பங்க்குகள் மூடப்பட்டிருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின் ரோடு பகுதி கூட வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெட்ரோல்-டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications