குடும்பத்துடன் ஸ்டாலின் லண்டன் பயணம்
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பாக மு.க.ஸ்டாலினுக்கும், அவரது சகோதரர் மு.க.அழகிரிக்கும் இடையே பூசல் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. அழகிரிக்குப் பதவி தருவது தொடர்பாக இந்த பூசல் வெடித்ததாக கூறப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பு ஸ்டாலின் பெங்களூர் போய் விட்டார். இதனால், அவர் கோபித்துக் கொண்டு போய் விட்டதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும் முதல்வரின் பிறந்த நாள் விழாவிலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், நேற்று தனது மனைவி துர்கா, மகன் மற்றும் இரு நண்பர்கள் ஆகியோருடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானம் மூலம் ஸ்டாலின் லண்டன் சென்றார். 10 நாட்களுக்கு ஸ்டாலின் லண்டனில் இருப்பார்.
லண்டன் பயணத்தின்போது தனது உடல் நலம் குறித்து பரிசோதனைகளையும் ஸ்டாலின் செய்து கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications