டீசல் விலை உயர்வு: சரக்கு கட்டணம் குறையும்-லாலு அதிரடி

Subscribe to Oneindia Tamil

Lalu Prasath
டெல்லி: டீசல் விலை உயர்ந்துள்ள நிலையிலும் பயணிகள் ரயில் கட்டணத்தையோ சரக்குக் கட்டணத்தையோ உயர்த்தப் போவதில்லை என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் டீசல் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை சரி கட்ட சரக்குப் போக்குவரத்தை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

முன்னதாக ரயில் கட்டணம் உயரலாம் என ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால், இதை லாலு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

ரயில்வே துறை ஆண்டுதோறும் 227 கோடி லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது. தற்போது டீசல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருப்பதால் ஆண்டுக்கு ரூ.681 கோடி கூடுதல் செலவாகும்.

ஆனால் இந்த விலை உயர்வின் பாதிப்பை ரயில் பயணிகள் மீதோ அல்லது சரக்கு போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்கள் மீதோ சுமத்த ரயில்வே துறை விரும்பவில்லை. சரக்கு போக்குவரத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும், திறமையான நிர்வாகம் மூலமும் இந்த செலவை சரிக்கட்டுவோம்.

சரக்கு கட்டணம் குறைப்பு:

உணவு தானியங்கள், சிமெண்ட், உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது சரக்கு கட்டணத்தில் 30 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது. இதை 50 சதவீதம் வரை அதிகரித்து தள்ளுபடி வழங்குமாறு ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிற சரக்குகளின் போக்குவரத்தை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தை பெருக்கும் வகையில் சரக்கு கட்டணத்தை மேலும் குறைக்க முடியுமா என்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பல நிலைகளில் கட்டணம் குறைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் லாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+