For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் மறியல்-1,000 என்எல்சி தற்காலிக ஊழியர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

நெய்வேலி: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

வேலை நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6வது நாளாக இன்றும் போராட்டம் தொடருகிறது. இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று மந்தாரக்குப்பம் பகுதியில், கடலூர் வழியாக திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயிலை மறிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்கள் குவிந்தனர்.

இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X