சமையல் செய்யாததால் மனைவி கொலை
Subscribe to Oneindia Tamil
வள்ளியூர்: மனைவி சமையல் செய்யாததால் அவரைக் கொன்ற கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.
ஏர்வாடி அருகேயுள்ள கோதைசேரியை சேர்ந்தவர் சந்தானம் மகன் சுடலைமுத்து. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுடலி. சுடலைமுத்து வெளியூர் சென்றதால் சுடலி மதிய உணவு சமைக்கவில்லை.
இந்த நிலையில் மாலையில் வீட்டுக்கு வந்த சுடலைமுத்து தனது மனைவியிடம் சாப்பாடு வைக்குமாறு கூறினார். அதற்கு சுடலி சமைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுடலைமுத்து கம்பியால் சுடலியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுடலி இறந்தார்.
ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து சுடலைமுத்துவை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications