25 ஆண்டுகளாக பாதையின்றி தவிக்கும் தலித் மக்கள்!
மதுரை: மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில், 25 வருடங்களாக பாதை வசதியின்றி தலித் மக்கள் தவித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் 45 கி.மீ தொலைவில் உள்ளது நக்கலப்பட்டி என்ற கிராமம் . இங்கு சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன.
இதில் 350 குடும்பங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த தலித் மக்களில் பெரும்பாலோர் மதுரை-போடி இடையே செல்லும் ரயில்வே இருப்புப் பாதையின் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு தெருவிளக்கு வசதி, சாலை வசதி , சமுதாயக் கூடம், பொதுச் சாவடி என ஒரு வசதியும் இல்லை. இதைவிட கொடுமை, இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு பாதை இல்லை என்பது தான்.
இது குறித்து அப் பகுதி தலித் மக்கள் சிலர் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒருவர் இறந்துவிட்டால் இறுதி சடங்கான பாடை கட்டுவது, தேர் கட்டுவது போன்றவை குறுகலான வீதிக்குள் செய்ய இயலாது.
இதனால் இறந்தவர்களை தோளில் போட்டு தூக்கிக்கொண்டு இருப்புப் பாதையை கடந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தான் பாடையிலோ, தேரிலோ வைத்து மயானத்திற்கு கொண்டு செல்லகிறோம்.
இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாதாதல் டார்ச் லைட் வெளிச்சத்தில் உடலைத் தூக்கி செல்கிறோம். பெண்கள் பிரசவவலியில் துடித்தால் கூட ஆட்டோ வேன் வராது. வழக்கம் போல் தோளில் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
ரயில்வே இருப்புப் பாதையை கடந்து அரசமரத்தடியை சென்றடைவதற்கு பாதை இருக்கிறது. ஆனால் அது ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் ஆட்டோ முதல் வேன் வரை எல்லா வாகனங்களும் ரயில்வே இருப்புப்பாதை வரை வந்துவிடும்.
இந்த கோரிக்கையை நாங்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 25 ஆண்டுகளாக வலியுத்தி வருகிறோம். ஆனால் பலன் தான் இல்லை என்கிறார்கள்.
உத்தபுரத்தில் தலித் மக்களுக்காக உடைக்கப்பட்டது சுவர். இங்கோ, பாதையே இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் அவலம். மாவட்ட நிர்வாகம் மந்த நிலையை விலக்கி தலித் மக்களுக்கு பாதை போட்டுத் தர முயற்சிக்குமா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications