பாக். பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட் குறைப்பு!
இஸ்லாமாபாத்: வரும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி அந் நாட்டு நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார். புதிய அரசுக்கான கொள்கைகளை அவர் விளக்கிப் பேசுகையி்ல்,
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் அதிகரிக்கப்படாது. கடந்த பட்ஜெட்டில் என்ன நிதி ஒதுக்கப்பட்டதோ அதே தான் ஒதுக்கப்படும். (வழக்கமாக ஆண்டுக்கான பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டை அந் நாடு அதிகரிப்பது வழக்கம்)
பண வீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவை ஒரு காரணமாக இருந்தாலும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண பாகிஸ்தான் விரும்புவதே நிதி ஒதுக்கீட்டை குறைத்ததற்கான முக்கிய காரணமாகும்.
இதை அண்டை நாடுகளும் உணர்ந்து கொண்டு அவர்களும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இந்த பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வர நாம் பாடுபட வேண்டும்.
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முடிவுக்கு முப்படைத் தளபதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார் கிலானி.












Click it and Unblock the Notifications