காட்டுப் பங்களாவுக்குப் போகும் ஞானேந்திரா!

நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து, நேபாளம் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரண்மனையை விட்டு வெளியேறுமாறும் மன்னர் ஞானேந்திராவுக்கு மாவோயிஸ்ட்கள் கெடு விதித்தனர்.
கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து அரண்மனையை விட்டு வெளியேற ஞானேந்திரா முடிவு செய்தார். அதன் படி இன்று மாலை பாரம்பரியம் மிக்க நாராயன்ஹிதி அரண்மனையை காலி செய்கிறார்.
அங்கிருந்து வனப் பகுதியில் உள்ள நாகார்ஜூனா மாளிகைக்கு அவர் செல்கிறார். அங்கு குடும்பத்துடன் தங்கவுள்ளார்.
இந்த மாளிகையும் கிட்டத்தட்ட ஒரு அரண்மனையைப் போன்றே உள்ளது. மொத்தம் பத்து கட்டடங்கள் இதன் வளாகத்தில் உள்ளது. அதில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு ஆகியவை உள்ளன.
தலைநகர் காத்மாண்டுவுக்கு வெளியே இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியில் இந்த பங்களா உள்ளது.
அரண்மனையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, மாலை 5 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ஞானேந்திரா. அப்போது தனது தரப்பு நிலை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கவுள்ளார்.
ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறுவதை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலா, பிரதமர் கொய்ராலாவை இன்றுகாலை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, நேபாள ராணுவத் தலைமைத் தளபதி ரூக்மாங்கத் கத்வால், நேபாள போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஞானேந்திரா குடியேறவுள்ள புதிய பங்களாவின் பாதுகாப்பு நிலை, அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications