For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அவர்கள் உளறலுக்குக் காரணம் என்ன?'-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கொள்ளையர்களை போலீசார் கைது செய்தால் அதைப் பாராட்டாமல்
சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக தூற்றித் திரிகின்றனர்.
உண்மையில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதா? அல்லது யாரோ
'ஊற்றிக் கொடுத்த' ஒன்று; இந்த உளறலுக்குக் காரணமா? என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கவிதை வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகப் போலீசார் ஒரு கொள்ளையை தடுத்தது மட்டுமல்லாமல்;
கொள்ளையர் நால்வரைக் கூண்டோடு கைது செய்தனர் என்றும்
துப்பாக்கிக் குண்டுகளைத் துப்பறியும் போலீசார்;
துருப்பிடித்த நிலையில் தோண்டியெடுத்தனர் என்றும்
ஏடுகளில் செய்திகள் வந்தால் போதும்;

நாடு காடாகி விட்டதென்றும்-
நாள்தோறும் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறதென்றும்
தேன் போலக் கொட்டித் தீர்க்கின்றார்; தேசப்பற்று மிக்கவர் போல!

பொல்லாத் திருடர்களை போக்கிலிகளின் கூட்டத்தாரை
போலீசார் வளைத்துப் பிடித்தனர் என்றால்; அவர்களைப்
போற்றிப் புகழ்தலன்றி கழக ஆட்சியை
தூற்றித் திரிகின்றார் எனும்போது

உண்மையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதா? அல்லது யாரோ;
ஊற்றிக் கொடுத்த ஒன்று; இந்த உளறலுக்குக் காரணமா?

காலிகளை, கயவர்களை, காவல்துறை கைது செய்து தண்டித்தால்
கை கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்காமல்-
கண்டனக் குரல் எழுப்பிச் சட்டம் ஒழுங்கு
கண்டபடி கெட்டு விட்டதென்று சாற்றுவது;
அரசியல் அசூயை அன்றி
அறிவுடையார் செயலல்லவே!

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X