தலித் மாணவர்கள் சேர்க்கை: சென்னை ஐஐடிக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பி.டெக் வகுப்புகளில் நேரடியாக சேர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஐஐடி நிர்வாகத்திற்கும், மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை ஐஐடியில், பி.டெக் வகுப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை, இடஒதுக்கீடு கொள்கையின்படி நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஐஐடி-சென்னை, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications