தென்மேற்கு பருவ காலம்-தமிழகத்தில் இன்று மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதால் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது. இப்போது கர்நாடகத்திலும் மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் தமிழகம், ஆந்திராவிலும் பருவ மழை ஆரம்பித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications