போலீஸ் வாகனம் மீது தாக்குதல்-ஜான்பாண்டியன் வழக்கில் இன்று தீர்ப்பு
நெல்லை: போலீஸ் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பான ஜான் பாண்டியன் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
1987ம் ஆண்டு நெல்லை நீதிமன்ற வாளகத்திற்குள் ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாளை போலீசார் ஜான்பாண்டியன் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நதனர். இதில் வழக்கு நிலுவையில் உள்ளபோது சிலர் இறந்து விட்டனர். மேலும் வழக்கு தொடர்புடைய சிலர் ஜாமீனில் உள்ளனர். ஜான்பாண்டியன் ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. தற்போது அனைத்து சாட்சி விசாரணைகளும் முடிந்து எதிர் மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள் வாதங்களும் நிறைவடைந்துவிட்டன.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. இதையொட்டி சேலம் சிறையிலிருந்து ஜான் பாண்டியனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications