திடீரென எரிந்த மாருதி வேன்-ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
சென்னை: சென்னை பரங்கிமலையில் மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த துரைராஜ் (56), அவரது மனைவி அமுதவல்லி, மகன் அருண், அக்கா எழிலராசி (60), உறவினர் அரசு (83) ஆகியோர் மாருதி ஆம்னி வேனில் சென்றனர்.
டிரைவர் கண்ணன் அதை ஓட்டிச்சென்றார். நேற்று இரவு 9 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு கண்டோன்மெண்ட் ராணுவ குடியிருப்பு அருகே வேன் வந்த போது, அதில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.
அடுத்த வினாடியே காரில் தீப்பிடிக்கத்துக் கொண்டு தீ கார் முழுவதும் பரவியது. செய்வதறியாமல் தவித்த டிரைவர் காரை எதிரே இருந்த சுவற்றில் மோதினார்.
காரில் இருந்தவர்கள் வெளியே குதிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் தீப் பிடித்துக் கொண்டதால் இறங்கக் கூட முடியவில்லை,
இதைப் பார்த்த பொது மக்கள் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்தனர். ஆனால், முழுமையாக தீயி்ல் சிக்கிக் கொண்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் காரிலேயே எரிந்து சாம்பலானார்.
துரைராஜ், அருண், எழிலரசி, டிரைவர் கண்ணன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் துரைராஜின் மனைவி அமுதவல்லி காயமின்றி தப்பிவிட்டார்.
மாருதி ஆம்னி வேன்கள் தீப் பிடித்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications