திடீரென எரிந்த மாருதி வேன்-ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
சென்னை: சென்னை பரங்கிமலையில் மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த துரைராஜ் (56), அவரது மனைவி அமுதவல்லி, மகன் அருண், அக்கா எழிலராசி (60), உறவினர் அரசு (83) ஆகியோர் மாருதி ஆம்னி வேனில் சென்றனர்.
டிரைவர் கண்ணன் அதை ஓட்டிச்சென்றார். நேற்று இரவு 9 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு கண்டோன்மெண்ட் ராணுவ குடியிருப்பு அருகே வேன் வந்த போது, அதில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.
அடுத்த வினாடியே காரில் தீப்பிடிக்கத்துக் கொண்டு தீ கார் முழுவதும் பரவியது. செய்வதறியாமல் தவித்த டிரைவர் காரை எதிரே இருந்த சுவற்றில் மோதினார்.
காரில் இருந்தவர்கள் வெளியே குதிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் தீப் பிடித்துக் கொண்டதால் இறங்கக் கூட முடியவில்லை,
இதைப் பார்த்த பொது மக்கள் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்தனர். ஆனால், முழுமையாக தீயி்ல் சிக்கிக் கொண்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் காரிலேயே எரிந்து சாம்பலானார்.
துரைராஜ், அருண், எழிலரசி, டிரைவர் கண்ணன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் துரைராஜின் மனைவி அமுதவல்லி காயமின்றி தப்பிவிட்டார்.
மாருதி ஆம்னி வேன்கள் தீப் பிடித்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications