மகுடத்தை ஒப்படைத்தார் ஞானேந்திரா - சிம்மாசனம் தர மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு குடியரசு நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான நாராயண்ஹிதி அரண்மனையிலிருந்து வெளியேறுமாறு மன்னருக்கு இடைக்கால அரசு உத்தரவிட்டது.
இதை ஏற்று ஞானேந்திரா, நகருக்கு வெளியே உள்ள மலை பங்களாவில் கடந்த வாரம் குடியேறினார்.
மன்னர் வெளியேறியதை தொடர்ந்து நாராயண்ஹிதி அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தனது மணி மகுடத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளார் ஞானேந்திரா. அதேசமயம், தனது பாம்பு வடிவிலான சிம்மாசனத்தை மட்டும் ஒப்படைக்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து
சிம்மாசனம் அவரிடமே இருக்க நேபாள அரசும் ஒப்புக் கொண்டது.












Click it and Unblock the Notifications