திருவிழாவில் மோதல்: பஸ், லாரி உடைப்பு-போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஒரு கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பஸ்கள், 2 லாரிகள் உடைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியில் பகவதி அம்மன், காளியம்மன், முனியப்பன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு முளைப்பாரி ஊர்வலம் ஜின்னா நகர் வழியாக சென்றது.

இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்றவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பூச்சிநாயக்கன் பட்டி மக்கள் சாலை மறியல் நடத்தினர்.

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் யாரும் இது வரை கைது செய்யப்படவில்லை என கூறப்படுறது.

இந்த நிலையில் மதுரையில் இருந்து பேகம்பூர் வழியாக வந்த 4 பஸ், 2 லாரிகளை மர்ம கும்பல் அடித்து உடைத்தது.

இதில் அரசு பஸ் டிரைவர் துரைசாமி, கண்டக்டர் மல்லையா உள்பட பஸ்ஸில் பயணம் செய்த பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கலவரம் பரவாமல்தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+