இந்திய எல்லைக்குள் 28 சிங்கள மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை கைது செய்த்து.
இந்திய கடலோர காவல் படை கப்பல் சாகர் வழக்கம் போல் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 65 கடல் மைல் தொலைவில் சில படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.
உடனே அவற்றின் அருகில் சென்று காவல் படையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது அவை இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இடம் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் படகுகளைச் சுற்றி வளைத்தனர். காவல்படை டிஐஜி ரகுவன்சி தலைமையிலான அதிகாரிகள், அந்த 6 படகுகளில் இருந்த 28 சிங்கள மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களை அந்தப் படகுகளிலேயே அழைத்துக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தனர்.
சிங்கள மீனவர்கள் வந்த படகுகள் மரியரோசா, மிஸ்புகா, அமுதா புத்தா, நீல்மெரின், ரசீமி, சுனிடீஸ் மரீன் மற்றும் மகா குருஜி ஆகிய ஆறும் இன்று காலை 5 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. 28 சிங்கள மீனவர்களையும் கடலோர காவல்படையினர் இன்று தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications