ரூ100 கோடியில் திருச்சி-மதுரை ரயில் பாதை மின்மயம்!
தூத்துக்குடி: திருச்சி-மதுரை ரயில் பாதை மின் மயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல்லை - திருச்செந்தூர் அகல ரயில்பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதலுக்கு பின்பு ஜூலை மாதம் ரயில் போக்குவரத்து துவங்கும்.
தென்னக ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்காக 2008-2009 ம் ஆண்டுக்கு ரூ. 1,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது விழுப்புரம்-திருச்சி இடையே ரயில் மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணி நிறைவடையும்.
திருச்சி-மதுரை இடையே உள்ள ரயில் பாதை மின் மயமாக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முடிவுடையும்.
ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2015 ம் ஆண்டிற்குள் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக நெல்லை, தூத்துக்குடிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்றார் அவர்.