சென்னையில் நள்ளிரவில் இடி-மின்னல்: கன மழை, சூறைக் காற்று
சென்னை: சென்னை நகரில் நேற்று நள்ளிரவில் திடீர் கன மழை பெய்தது. பயங்கர இடியும், மின்னலும், சூறைக் காற்றுமாக கன மழை பெய்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
அக்னி நட்சத்திர வெயில் முடிந்த போதிலும் அவ்வப்போது சென்னையில் வெயில் அடித்துவருகிறது. திடீர் திடீரென மழையும், பலத்த காற்றும் வீசி வருவதால் என்ன மாதிரியான கிளைமேட் நிலவுகிறது என்பதில் மக்களுக்ேக பெரும் குழப்பமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை நகரில் பலத்த மழை பெய்தது. பயங்கர இடியும், மின்னலும் இருந்தது. சூறைக் காற்றும் வீசியதால் மக்கள் பீதியடைந்தனர்.
நீண்ட நேரம் நீடித்த இந்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல வீடுகளில் டிவி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை மின்னல் காரணமாக சேதமடைந்தன.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னல் இருந்தாலும் லேசான மழையே காணப்பட்டது.
சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications