முதல்வரின் தஞ்சை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜூன் 24-ம் தேதி நடைபெறும் தஞ்சை நீதிமன்ற 200-வது ஆண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவதையொட்டி, விழா முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தஞ்சாவூர் தமிழப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கரிகால் சோழன் அரங்கில் காலை 9.50 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவுக்கு, முதல்வர் மு. கருணாநிதி தலைமை வகிக்கிறார்.
இதையொட்டி, கரிகால் சோழன் அரங்கின் உள்பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அரங்கின் வெளியிலும், முகப்பிலும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இப் பணிகளை மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன், திருச்சி மக்களவை உறுப்பினர் எல். கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. கருணாகரன், பொதுப் பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் கலைச்செல்வன், வட்டாட்சியர் கே. சண்முகம், வழக்குரைஞர் அமர்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications