கள்ளச் சாராய சாவு எதிரொலி: 21 போலீஸார் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி மாவட்டம் மலைகிராமமான குக்கல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தைக் குடித்த 3 பேர் பலியானார்கள். 16 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 2 கள்ளச்சாராய வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதற்காக அரூர், பொம்மிடி காவல் நிலையங்களைச் சேர்ந்த 21 போலீஸார் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications