மரணமடைந்த பாஜக எம்எல்ஏ மனைவியின் நண்பர் கைது
கர்நாடக மாநிலம் உடுப்பி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரகுபதிபட். இவரது மனைவி பத்மப்ரியா. சமீபத்தில் இவர் காணாமல் போனார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள வீட்டில் அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
பத்மப்ரியாவை அவரது பால்ய கால நண்பரானஅதுல்ராவ் தான் கடத்தியதாக பத்மப்ரியா மற்றும் ரகுபதி பட்டின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மங்களூரில், அதுல் ராவை போலீஸார் திடீரென கைது செய்தனர். அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்று அதுல் ராவை போலீஸார் கைது செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பத்மப்ரியா மரணம் குறித்து அதுல் ராவ் போலீஸாரிடம் பரபரப்பு தகவல்களைத் தெரிவித்துள்ளார். ரகுபதி பட்டுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வருகிறது. இதுகுறித்து பத்மப்ரியாவுக்குத் தெரியவந்தது.
இதை என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். டெல்லிக்கு வந்து சில நாட்கள் இருக்குமாறு கூறி அழைத்துச் சென்றேன். ஆனால் நாங்கள் டெல்லிக்குப் போன பின்னர் நான், பத்மப்ரியாவை கடத்திச் சென்று விட்டதாக பத்திரிகைகள், டிவிகளில் செய்தி வெளியானது. இதைக் கேள்விப்பட்டு பத்மப்ரியா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
குடும்பக் கெளரவம் கெட்டு விட்டதே என்று வருத்தப்பட்டார். இதனால்தான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார் அதுல் ராவ்.
தனக்கும், பத்மப்ரியாவுக்கும் இடையே எந்தத் தவறான உறவும் இல்லை என்றும் அதுல், போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம்.













Click it and Unblock the Notifications