'கவுத்திராதீங்க': இடதுசாரிகளுக்கு வீரமணி கோரிக்கை
சென்னை: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே பொதுத் தேர்தல் வந்தால், அதனால் பிறகு அனைவருமே வருந்தும் நிலை ஏற்படும் என
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது மத்திய ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அதனால் கெட்ட பெயர் இடதுசாரி கட்சிகளுக்கும் ஏற்படக்கூடும். முன்கூட்டியே பொதுத் தேர்தல் வந்தால், அதனால் பிறகு அனைவருமே வருந்தும் நிலை ஏற்படக்கூடும்.
எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், மதவாத சக்திகள் என்ற பொது எதிரியை நுழைய விடாமல் காக்கவே, 5 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆதரவு தந்தோம் என்பதுதான் இடதுசாரிகளுக்கு பெருமை தருவதாக அமையும்.
மூத்த அரசியல் ஞானியான முதல்வர் கருணாநிதியின் வழிகாட்டுதலால், இந்தியா காப்பாற்றப்பட அனைத்து முற்போக்கு சக்திகளும் கட்சிக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி, நாட்டுக் கண்ணோட்டத்திற்கே முன்னுரிமை தந்து, வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் முற்போக்கான முடிவுகளை எடுக்க துணைபுரிந்தனர் என்று பதிவு செய்ய ஒத்துழைப்பு நல்குவது அவசியம் ஆகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications