For Daily Alerts
Just In
சில்லறை தட்டுப்பாடு- விநாயகருக்கு நூதன அபிஷேகம்!
திருச்சி: திருச்சியில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க விநாயகருக்கு சில்லறை காசு மூலம் நூதன அபிஷேகம் செய்யப்பட்டது.
திருச்சி, கரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் , 25 காசு, 50 காசு, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போன்ற காசுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பஸ், டீ கடை, கோவில், போன் பூத்களில் சில்லறை பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை போக்க விநாயகருக்கு சில்லறை காசுகளால் அபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருச்சி லால்குடி ஓமக்குளத்தில் உள்ள விநாயகருக்கு சில்லறை காசு மூலம் நவீன அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Story first published: Tuesday, June 24, 2008, 12:30 [IST]