குறைந்த கட்டண விமான சேவை 'பிளை துபாய்'
துபாய்: குறைந்த கட்டண விமான சேவையை தொடங்கவுள்ள துபாய் அரசு அந்த நிறுவனத்திற்கு பிளை துபாய் என பெயரிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இந்த விமான சேவை அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து அருகாமையில் உள்ள நாடுகள், இந்திய துணைக் கண்ட நாடுகளுக்கு இந்த விமான சேவை இயக்கப்படும்.
பிளைதுபாய் என்ற பெயருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்து பிளை துபாய் நிறுவனம் செயல்படும்.
எமிரேட்ஸ் மற்றும் பிளைதுபாய் நிறுவனங்களின் தலைவரான ஷேக் அகமது இதுகுறித்துக் கூறுகையில், பிளை துபாய் நிறுவனத்தின் முதல் சேவை 2009ம் ஆண்டு மத்தியில் தொடங்கும். அருகாமையில் உள்ள நாடுகளில் வசிப்போருக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications