கேரளா, பிகார், அஸ்ஸாம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேரளா, பிகார், அஸ்ஸாம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பிறப்பித்தார்.
கேரள ஆளுநராக ஆர்.எஸ். கவாய், பிகார் ஆளுநராக ஆர்.எல்.பாட்டியாவும் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கவாய் பிகார் ஆளுநராகவும், பாட்டியா கேரள கவர்னராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் பரஸ்பரம் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் ஆளுநராக சிவ் சரண் மாத்தூர், சிக்கிம் ஆளுநராக பால்மிகி பிரசாத் சிங், மேகாலயா ஆளுநராக ரஞ்சித் சேகர் முஸாஹரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவ் சரண் மாத்தூர் முன்னாள் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வராக இருந்தவர்.












Click it and Unblock the Notifications