இந்தேனேஷிய ராணுவ விமானம் மாயம்- இந்தியர் உள்பட 18 பேர் கதி?
ராணுவத்துக்கு சொந்தமான Casa C-212 ரக விமானம் அது. அதில் இந்தியர் ஒருவரும், பிரிட்டன், சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் உள்பட 18 பேர் பயணித்தனர். இதில் 6 பேர் தவிர மற்றவர்கள் ராணுவத்தினர்.
இந்த நேற்று விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியிலான சலாக் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தரைக்கப்பாட்டு ரேடாரில் இருந்து மறைந்தது.
இதனால் அது கீழே விழுந்து சிதறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் இந்தோனேஷிய ராணுவ ஹெலிகாப்டர்களும் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் பயணித்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் மூவரும் இந்த விமானத்தில் பொருத்தப்பட்ட நவீன ரக aerial photography கேமராக்களை விற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்த கேமராவை சோதனையிடச் சென்றபோது தான் விமானம் மாயமானதாகவும் இந்தோனேஷிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.