For Daily Alerts
Just In
குற்றாலத்தில் உற்சாக வெள்ளம்!
தென்காசி: குற்றாலத்தில் 10 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை மீண்டும் சாரல் பெய்யத் துவங்கியது.இந்த ஆண்டு சீசன் துவங்கிய பிறகு நேற்றுதான் முதன்முறையாக பகல் முழுவதும் நல்ல சாரல் பெய்தது. சீசனுக்குரிய அனைத்து சிறப்பு அம்சங்களும் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை மறைத்து மெல்லிய திரை போடும் மேகம், சிறிய இடைவெளியில் மீண்டும் மீண்டும் தூறும் சாரல், இதமான தென்றல் காற்று என்று குற்றால சீசன் நேற்று அருமையாக இருந்தது.
இதனால் மதியம் வரை வறண்டு காணப்பட்ட மெயின் அருவியில் மதியத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் உள்ள ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டியது.
நேரம் செல்ல செல்ல அருவிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது போல சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
Comments
Story first published: Sunday, June 29, 2008, 17:44 [IST]