விலைவாசி உயர்வு விஷம்!-ஜனநாயக மாதர் சங்கம் விளாசல்!!
நாகை: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியது போல் விலைவாசி உயர்வு கசப்பு மருந்து அல்ல, அது ஒரு விஷம் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் வாசுகி கருத்து தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 12 வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் வாசுகி பேசுகையில், மேட்டூரில் தண்ணீர் திறந்து நாகை வந்து விட்டாலும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்று பலர் சொன்னாலும், சீர்காழி, கொள்ளிடம் போன்ற இடங்களில் தீண்டாமை கொடுமை இன்றளவும் நிலவிவருகிறது.
நாகை, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் போதுமான அளவு டாக்டர்கள் இல்லை. எனவே இப் பிரச்சனைக்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
பிரதமர் எப்போதும் ஜார்ஜ் புஷ் -சையும் அணு சக்தி ஒப்பந்தத்தையும் மட்டுமே நினைத்துக் கொண்டு உள்ளார். இதனால் அவருக்கு பசி இல்லை, தூக்கம் இல்லை. தேசத்திற்கும் மக்களுக்கும் நன்மை செய்யாத அந்த ஒப்பந்தத்தை நினைத்து தான் கவலைப்பட்டுக் கொண்டு உள்ளார். அவருக்கு பசி ஒரு பிரச்சினை இல்லை.
நாடு வளர வளர விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் இது கசப்பு மருந்து என்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் இது கசப்பு மருந்து அல்ல. அது ஒரு விஷம் என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமே தெரியும்.
தடுப்பு ஊசி தயாரிக்கும் மூன்று நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ள மத்திய அமைச்சர் அன்புமணி, தனியாரிடம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அப்படி செய்வது ஆபத்தானது என்றார் வாசுகி.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications