சென்னையில் செம்மொழி தமிழாய்வு நிறுவன திறப்பு விழா
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழை செம்மொழியாக அறிவித்த மத்திய அரசு, அடுத்து சென்னை, காமராஜர் சாலையில் பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை அமைத்துள்ளது.
இதை நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் முதல்வர் கருணாநிதி, திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில் ஐம்பெருங்குழு-எண்பேராயம் நிர்வாகிகள், உறுப்பினர்களான வ.அய். சுப்பிரமணியம், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, அவ்வை நடராசன், தமிழறிஞர் மணவை முஸ்தபா, கவிப்பேரரசு வைரமுத்து, பு.பா. ராசராஜேசுவரி,
மா.நன்னன், கவிக்கோ அப்துல்ரகுமான், சிலம்பொலி சு. செல்லப்பன், கவிஞர் கனிமொழி, கவிஞர் வாலி, கா.வேழவேந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications