மலேசியா-சென்னை கப்பலில் ரூ. 1.43 கோடி வைரம் கடத்தல்
Subscribe to Oneindia Tamil

சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து வந்த சரக்குக் கப்பலின் கண்டெய்னர்களை சுங்க இலாகாவினர் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரம் இளையான்குடியை சேர்ந்த காதர் நைனார் கான் என்பவரின் பெயருக்கு வந்த பார்சலில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகள் அதிக எடையுடன் இருந்தன.
இதையடுத்து அவற்றை பிரித்துப் பார்த்தபோது அதில் வைர கற்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 1.43 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நைனாரைப் பிடிக்கவும் அதை அனுப்பியவர்களை மடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications