பந்து வீச்சாளர் கோனியால் ஆபத்து-தாய் பரபரப்பு புகார்

சண்டிகரைச் ேசர்ந்தவர் கோனி. இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். தனது அபாரமான பந்து வீச்சால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கோனி மீது அவரது தாயார் பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோனியின் தாயார் மொகீந்தர் கெளர் மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோனி அவரது மனைவியின் உறவினர்கள் தூண்டுதலால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்படும் முன் கோனியுடன் அவரது மனைவியின் உறவினர்கள் வந்து என்னை மிரட்டினர்.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்த கோனி, எனது பொருட்களை எடுத்துச் சென்றதுடன் என்னை தாக்கவும் முயன்றார்.
கோனியின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவர் மீது போலீசில் புகார் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெளரின் புகார்கள் பொய்யானவை என்று கோனியின் மனைவி மறுத்துள்ளார். இதுகுறித்து கோனி இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications