3 நாகை மீனவர்கள் 3 மாயம்-ஹெலிகாப்டர் மூலம் தேடுதல்

Subscribe to Oneindia Tamil

நாகை: மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் மூன்று பேர் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்று நாகை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (32). அதே பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (40). ராமையன் (58).

இவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 27 ம் தேதி அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.

இதனால் அக்கரைப்பேட்டை மக்கள் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் காணமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மீனவர்கள் காணமல் போனது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 விசை படகுகள் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கடலோர காவல் படைக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஹெலிகாப்டரில் அவர்களை தேடும் பணி தொடங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+