பெட்ரோல் பஞ்சம்: பங்க் முன்பு பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நிலவும் பெட்ரோல் பஞ்சத்தைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பாஜக பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார்.
மகளிர் அணி துணை தலைவி லலிதா சுபாஷ், இளைஞர் அணி துணைத் தலைவர் ரமேஷ், தி.நகர் வேதா, மாணவர் அணி செயலாளர் சதீஷ், மாவட்ட தலைவர் பால்சிங் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், நேற்று முதல் டீசல், பெட்ரோல் கிடைக்காமல் மக்கள் மரண அவஸ்தை பட்டு வருகிறார்கள். இது பற்றி மத்திய, மாநில அரசுகள் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையை கடுமையான அளவுக்கு உயர்த்தினார்கள். இப்போது பிரிமியம் பெட்ரோல், பிரிமியம் டீசல் என்ற பெயரில் மேலும் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர்.
சாதாரண பெட்ரோல், டீசல் தாராளமாக கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்வதா என்று போலீசாருடன் பா.ஜனதா வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications