ஸ்டிரைக்கில் பெட்ரோல் டேங்கர்கள் பங்கேற்கவில்லை
சென்னை: லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது.
இதில் பெட்ரோல், டீசல் லாரி டேங்கர்களும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருக்கும் சென்னை நகரமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் அவர்களது 'வாகனங்களில் எண்ணை வார்ப்பது போல', இந்தப் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று சென்னை டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், சென்னை நகரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. இந்த நிலையில்நாங்களும் போராட்டத்தில் கலந்துகொண்டால் அது பொதுமக்களை பெருமளவில் பாதிக்கும். எனவே மக்கள் நலன் கருதி எங்களது சங்கத்தைச் சேர்ந்த ஆயிரம் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில்கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாததால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால், இதில் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் கலந்து கொண்டுள்ளதால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.












Click it and Unblock the Notifications