மீண்டும் பேட்டி?- வீரபாண்டிக்கு பாமக சவால்!
சேலம்: நாங்கள் எங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தாயார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா செய்ய தயாரா என பாமக எம்எல்ஏகள் காவேரி, தமிழரசு ஆகியோர் என சவால் விட்டுள்ளனர்.
பாமகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் காவேரி, தமிழரசு ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பாமக குறித்தும், டாக்டர் ராமதாஸ் குறித்தும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இழிவாக பேசி வருகிறார். இது வருந்ததக்கது.
திமுக தயவில் நாங்கள் வெற்றி பெற்றதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். அது தவறு. எங்கள் உழைப்பால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம்.
நாங்கள் எங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தாயார். அதே போன்று வீரபாண்டி அமைச்சர் ஆறுமுகம் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்க தயாரா.
மக்கள் செல்வாக்கு உள்ளதாக கூறப்படும் வீரபாண்டி ஆறுமுகம், அவர் சொந்த தொகுதியை விட்டு விட்டு, பாமக செல்வாக்கு பெற்ற சேலம் 2 வது தொகுதியில் ஏன் போட்டியிட வேண்டும்.
வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் வெறும் 900 ஒட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். இதை எப்படி மக்கள் செல்வாக்கு என்று கூற முடியும்.
கல்குவாரி முதல் மணல் குவாரி வரை அமைச்சரின் கை ஒங்கியுள்ளது. அது மட்டும் அல்ல, ஒமலூர் அரசு மருத்துவ மனை திறப்பு விழாவில் கூட அரசியல் விளையாடியது. நீதி மன்றம் தலையிட்ட பின்பே திறப்பு விழாவே நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications