பூரி ரத யாத்திரையில் விபரீதம் - தேர் சக்கரத்தில் சிக்கி 6 பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பூரி: பூரியில் நடந்த ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரையின்போது ரத சக்கரத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரிசா மாநிலம் பூரியில், ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியில் திரண்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரத யாத்திரைதொடங்கியது. அப்போது, சுபத்ரா தேவி ரதம் அருகே பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பல பக்தர்கள் ரத சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே பெரும் போர்க்களம் போல காணப்பட்டது.
சக்கரத்தில் சிக்கியவர்களில் இதுவரை 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பணியில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications