கொத்தடிமை-கர்நாடகத்தில்2 நெல்லை மாணவர்கள் மீட்பு
சுரண்டை: கர்நாடகத்தில் கொத்தடிமைகளாகத் தவித்த நெல்லை மாணவர்கள் இருவர் கர்நாடகத்தில் மீட்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள பாலபத்திரராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் மாரிமுத்து, ராமலிங்கம் மகன் ராஜ்குமார்.
இருவரும் கடந்த ஏப்ரலில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். விடுமுறையில் ஊர் சுற்றியவர்களை பெற்றொர்கள் கண்டித்தனர். இதனால் மாணவர்கள் இருவரும் வீட்டில் கோபித்துக் கொண்டு கடந்த 26.4.08 அன்று ராஜ்குமார் அண்ணன் வேலை செய்யும் திருப்பூருக்கு பஸ் ஏறினர்.
திருப்பூர் பஸ் நிலையத்தில் இறங்கிய இவர்களை சந்தித்த புரோக்கர் பெருமாள் அன்பாக பேசி ரூ. 5 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதனை நம்பிய மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோர் பெருமாளுடன் சென்றனர். பைக்கில் அழைத்து சென்ற அவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர்களை கொண்டு சென்று விட்டார்.
இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து பஸ்சில் கர்நாடக மாநிலம் சென்ராயபட்டணம் என்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள காட்டு பகுதியில் ஆழ்துணை கிணறு பணி நடந்த இடத்தில் வேலைக்கு சேர்த்து விடப்பட்டனர்.
இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்ய வலியுறுத்தப்பட்டனர். சாப்பாடும் ஒழுங்காக கொடுக்கவில்லை. இதனால் பசி கொடுமையால் தவித்தனர். தங்களுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலம் ஊரில் உள்ள பெற்றொருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆழ்துணை கிணறு பகுதியை கான்ட்ராக்ட் எடுத்துள்ளவரின் செல்போன் நம்பரையும் அவர்களுக்கு கொடுத்து தங்களை எப்படியாவது மீட்கும்படி கூறினர்.
இதைத் தொடர்ந்து பெற்றொர்கள் அந்த கான்ட்ரக்டரை அவர் நம்பரில் தொடர்பு கொண்டு இருவரையும் ஊருக்கு அனுப்பு வைக்கும்படி கூறினர். அதற்கு அவர் அவர்களை ஒரு சில நாட்களில் அனுப்பி வைப்பதாக கூறினார்.
ஆனால் ஒரு மாதமாகியும் அனுப்பவில்லை. இதுகுறித்து ஊத்துமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கரூரில் இயங்கி வரும் ஆழ்துளை கிணறு கிளை அலுவலகத்திற்கு போலீசார் மற்றும் பெற்றொர்கள் சென்றனர். அதன்பிறகு அங்குள்ளவர்களின் உதவியுடன் கர்நாடகம் சென்று மாணவர்கள் இருவரையும் மீட்டு நேற்று ஊருக்கு அழைத்து வந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications