தமிழகத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
சென்னை: நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி நியமனத்தின்போது நீதிமன்றப் பணியாளர்களையும் பரிசீலிக்கும் முடிவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதில், சிவில் நீதிபதி நியமனத்தில், சட்டம் படித்த நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொள்ளலாம் என்ற முடிவைக் கைவிட வேண்டும். இந்த முடிவால், வக்கீல்தொழில் பார்த்து வருவோரும், நீதித்துறையும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.
சிவில் நீதிபதி நியமனம் தொடர்பான நீதிபதிகளின் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளையே அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கமும் கலந்து கொண்டன.












Click it and Unblock the Notifications