மின்சாரம் தாக்கி 2 பெண்கள், தொழிலாளி பலி
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி கயிறு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கீழகரம்பட்டி கிராமத்தில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இன்று காலை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வீரமணி (32) என்ற பெண் தொழிலாளர் மின்சார வயரைத் தொட்டு விட்டார். இதையடுத்து அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் துடிதுடித்தார்.
இதைப் பார்த்த அவரது கணவர் மணி (43) வீரமணியைக் காப்பாற்ற ஓடி வந்து அவரைப் பிடித்தார்.அப்போது அவரது உடலுக்கும் மின்சாரம் பரவியது.
இதைப் பார்த்த முத்துலட்சுமி (35) என்ற பெண் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேருமே தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்களை மீட்ட போலீஸார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications