சோயிப் அக்தர் மீதான தடையை சஸ்பெண்ட் செய்து கோர்ட் உத்தரவு
கராச்சி: பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாலர் சோயிப் அக்தருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடையை லாகூர் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் விளையாடக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2 ஆண்டு கால புரபேஷன் பீரியடில் நன்னடத்தையுடன் இல்லாததாலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சோயிப்அக்தருக்கு 18 மாத தடையை விதித்தது. இதனால் சோயிப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தன் மீதான தடையை நீக்கக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சோயிப் அக்தர். அந்த வழக்ைக விசாரித்த உயர்நீதிமன்றம், தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரைதொடர்ந்து சோயிப் அக்தர் விளையாடலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இருப்பினும் சோயிப்புக்கு விதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த உத்தரவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சட்ட ஆலோசகர் தபசுல் ரிஸ்வி கூறுகையில், சோயிப் அக்தர் மீதான தடை மட்டும்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது அபராதத் தொகை ரத்து செய்யப்பவில்லை. எனவே முதலில் அவர் அபராதத் தொகையை கட்ட வேண்டும். அப்படி செய்தால்தான் மற்றவை குறித்து பரிசீலிக்க முடியும் என்றார்.
கோர்ட் உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் சோயிப். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறது. மீண்டும் விளையாடப் போகிறோம் என்பதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. விரைவில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆட ஆவலாக உள்ளேன்.
அதற்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள கவுன்டி கிளப் அல்லது லீக் அணியில் இணைந்து பயிற்சி பெறவும் திட்டமிட்டுள்ளேன் என்றார் சோயிப்.












Click it and Unblock the Notifications