பாளை சிறையில் கைதிகள் மோதல்
நெல்லை: பாளை சிறையில் மதுரை-நாகர்கோவில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 100 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
பாளை உள் சிறையில் 7-வது அறையில் நாகர்கோவில் விசாரணை கைதிகள் ஆறுமுகம், சுடலைமணி, கலீப் உள்பட 5 பேர் உள்ளனர். இதன் பக்கத்து அறையில் மதுரை விசாரணை கைதி வெங்கட் உள்ளார். இந்த நாகர்கோவில் கைதிகளுக்கும் இவருக்கும் இரவில் தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கட் தாக்கப்பட்டார். காலையில் சிறையின் அறைகளிலிருந்து கைதிகள் வெளியில் வந்தனர்.
அப்போது வெங்கட் புதுபில்டிங்கில் 8-வது அறையிலிருந்த மதுரையை சேர்ந்த அவரது கூட்டாளிகள் சோமசுந்தரம், விஜயன், சின்னப்பாண்டி, ஷாபி ஆகியோரிடம் தான் தாக்கப்பட்ட விஷயத்தை தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பதிலுக்கு எதிர் கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகத்தை தாக்கினர். அங்கு வந்த ஆறுமுகத்தின் கூட்டாளிகளும் பதிலுக்கு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வார்டன் பாஸ்கரன் இரு கோஷ்டியையும் சமதானப்படுத்தினார். ஆனால் அவரை சோமசுந்தரம் என்ற கைதி கீழே தள்ளி தாக்கினார். இதனையறிந்த அங்கு வந்த 25 வார்டன்கள் இரு கோஷ்டியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
பின்னர் சோமசுந்தரம், விஜயன், சின்னப்பாண்டி, ஷாபி ஆகிய 4 கைதிகளும் வெளிசிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் ஜெயிலர்கள் நிஜாமுதீன், அமிர்தலால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications