வீழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் சேது திட்டம் வெற்றி பெறும்: கருணாநிதி
சென்னை: எத்தனை வீழச்சிகள் வந்தாலும், தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி சேது சமுத்திரத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சகோதரர் டி.ஆர். சக்திவேல் - தமிழரசி தம்பதிகளின் மகன் டி.ஆர்.எஸ். கார்த்திக் - அனுசுயா திருமணம் சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
'ஸ்டாலின் 'ஆப்சென்ட்' - அழகிரி வரவேற்பு'
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இந்தத் திருமண விழாவுக்கு வந்துள்ள பத்திரிக்கையாளர்கள் நாளை என்ன செய்தி வெளியிடுவார்கள். பாலுவைப் பற்றியா, என்னைப் பற்றியா, பேராரிசிரியர் உரையைப் பற்றியா என்றால் இந்தசிறப்புகளை எல்லாம் அவர்கள் கண்ட காட்சிகளையெல்லாம் முதலிடம் கொடுத்து வெளியிடுவதற்குப் பதிலாக பத்திரிகைகளில் என்ன முதலிடம் பெறும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் - நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் - எனக்குத்தெரியும் என்ன வெளியிடுவார்கள் என்று.
பாலு வீட்டுத் திருமணம் - ஸ்டாலின் ஆப்சென்ட் - அழகிரி வரவேற்புரையாற்றினார் - இதுதான் நாளைக்குப் பத்திரிகைகளிலே நாளைக்குத் தலைப்பாக வரும்.
காஞ்சிபுரம் சி.வி.எம். அண்ணாமலை இல்லத்தில் நடைபெறுகின்ற திருமண விழாவில் தலைமையேற்று வைப்பதற்காக ஸ்டாலின் சென்றிருக்கிறாரே தவிர, பாலு மீது அவருக்கு எந்தக் கோபமும் இல்லை. பாலுவும், ஸ்டாலினும் எந்த அளவுக்கு நண்பர்களாகப் பழகுகிறார்கள் என்பது எங்களுக்கெல்லாம் கூட பொறாமையாக இருக்கும். அப்படிப் பழகுகிறவர்கள், ஆனால் இன்றைக்குப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் பணியை.
ஒருபுறத்தில் வரவேற்க அழகிரி - இன்னொரு புறத்தில் வரவேற்க ஸ்டாலின் - நன்றி கூறிட கனிமொழி - இப்படி மூன்று, நான்கு பிள்ளைகளைப் பெற்ற காரணத்தால், என்ன லாபம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
பாலுவைப் பொறுத்தவரையில், இன்றைக்கு மத்திய அமைச்சர். அவர் தஞ்சை மாவட்டத்தில், என்னைப் போல எங்கேயோ ஒரு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒரு பிள்ளைதான். சென்னைக்கு வந்தார், படித்தார், கல்வியிலே திறன் பெற்றார். அவருடைய கட்சிப் பற்று எத்தகையது என்பதை நானும், பேராசிரியரும் நேரடியாக உணர்வோம். வேகமாகப் பேசுவார், மேடையில்மட்டுமல்ல, எங்களிடத்திலும் கூட.
அந்த வேகத்தில் கட்சிப் பற்று அதிகமாகமாக இருக்குமே தவிர ஆத்திரம், கோபம், ஆவேசம் இவை இருப்பதில்லை. இவற்றுக்கு மாறாக அத்தனையும் பாசமாக இயக்கத்தின் பற்றாக அவரிடம் இருப்பதைத்தான் நான் கவனித்திருக்கிறேன்.
சில நேரங்களில் இந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்பார். தென் சென்னையில் அல்லது மத்திய சென்னையில் எங்கேயோ ஓரிடத்தில் தான் நிற்கிறேன் என்பார். நானும், பேராசிரியரும் பொருளாளரும் அதைப் பற்றிக் கலந்து யோசித்து கடைசியாக அவரிடத்தில் வாதம் செய்து, இல்லை, நான்தான் நிற்பேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று அவர் கேட்டு, சரி என்று நாங்கள் சொன்ன பிறகுகோபிப்பார்.
ஏன்யா கோபிக்கிறே, அதுதான் சரி என்று சொல்லிட்டோமே என்றால், இவ்வளவு நாளும் முடியாது, முடியாது என்று சொன்னீங்களே என்று அதற்காக கோபிப்பார். ஆக, எப்படியோ கோபித்துக் கொண்டாக வேண்டும். அந்த உரிமைய அவர் எங்களிடத்திலே எடுத்துக் கொள்வார்.
இந்த மாவட்டத்தினுடைய செயலாளராக இருக்கிறார், மத்தியில் மந்திரியாக இருக்கிறார். மத்தியிலும் நல்ல கீர்த்தி வாய்ந்த மந்திரி என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார். அதிலே எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி.
பாலு எப்படி இரண்டெழுத்துப் பெருமை உடையதோ, அதைப் போல அவரால் இன்றைக்குத் திட்டமிடப்பட்டு உருவாகிக் கொண்டிருக்கும் சேது என்பதற்கும் இரண்டு எழுத்துக்கள்தான். பாலு பெற்றிருக்கின்ற வெற்றிகளை சேதுவும் பெற வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவரால் அந்த வெற்றியைத் தேடித் தர முடியும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வரவேற்ற திட்டம், ஏற்றுக் கொண்ட திட்ட். அந்தத் திட்டத்தைதான் இன்றைக்கு நாம் நிறைவற்றத் துடித்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தடுத்தால் பாலுவின் மேன்மை குறையும். பாலுவின் பெருமை குறையும் என்று யாராவது கருதுவார்களேயானால், நான் அவர்களுக்கு சொல்கிறேன், இது இடையிலே பல தோல்விகளைச் சந்தித்தாலும், பல வீழ்ச்சிகளைச் சந்தித்தாலும், இறுதி வெற்றி - சேது சமுத்திரத் திட்டம் உருவாயிற்று - என்ற பெரியாருடைய எண்ணத்தின் வெற்றியாக, அண்ணாவின் எண்ணத்தின் வெற்றியாக, காமராஜருடைய கனவின் வெற்றியாகத்தான் அது அமையும் என்றார் கருணாநிதி.
முன்னதாக திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களை மு.க.அழகிரி வரவேற்றார்.
முதல்வரின்மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகன் மு.க.தமிழரசு, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், மத்திய இணை அமைச்சர் முனியப்பா, மார்க்சிஸ்ட்செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கவிஞர் கனிமொழி எம்.பி. நன்றி உரை நிகழ்த்தினார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேறொரு திருமண விழாவுக்குப் போய் விட்டதால் அவர் மட்டும் வரவில்லை.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications