For Quick Alerts
For Daily Alerts
Just In
அணு ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் வரலாறு மன்னிக்காது: ககோத்கர்
பெங்களூர்: அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால், நம்மை வரலாறு மன்னிக்காது என்று அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோத்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ககோத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது நமக்குக் கிடைத்திருப்பது ஒரு அரிய வாய்ப்பு. நமது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், நாட்டின் எதிர்கால மின்சாரத்தேவையை நிறைவேற்றிக் கொள்ள நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டின் ஆற்றல் பாதுகாப்புக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இதை நாம் தவற விடக் கூடாது. இதில் நாம் தோல்வி அடைந்தால் வரலாறு நம்மை மன்னிக்கவே மன்னிக்காது என்று கூறியுள்ளார் ககோத்கர்.
--
Comments
Story first published: Sunday, July 6, 2008, 10:59 [IST]