தமுமுகவின் புதிய அரசியல் கட்சி மக்கள் முன்னேற்ற கழகம்
திருச்சி: தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சியில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,முஸ்லீம் மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்தவே தமுமுக துவங்கப்பட்டது. தற்போது புதிய அரசியல் வடிவம் பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.
எனவே தமுமுக ஆதரவுடன் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்க முடிவு செய்துள்ளோம்.
முஸ்லீம்களுக்கு அறிவிக்கப்பட்ட தனி இட ஒதுக்கீட்டில் ரோஸ்டர் என்ற குழப்பம் ஏற்பட்டதை தமிழக முதல்வர் நிவர்த்தி செய்துள்ளார். அதற்கு நாங்கள் நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
முஸ்லீம்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சில பள்ளிகள் அமுல்படுத்த மறுக்கிறது. எனவே அந்த பள்ளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது அரசியல் கட்சியின் முதல் இலக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications