28ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
வியன்னா: சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கவர்னர்கள் போர்டு கூட்டம் வருகிற 28ம் தேதி வியன்னாவில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு இந்தக் கூட்டம் முக்கியமானது. இக்கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும்.
இந்தக் கட்டத்தில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த்திற்கான ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அடுத்த கட்டமாக அணு பொருள் சப்ளை நாடுகள் எனப்படும் என்.எஸ்.ஜி. அமைப்பின் நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம்.
எனவே இந்தக் கூட்டத்தில் இந்தியா கட்டாயம் பங்கேற்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications